வவுனியா – மன்னார் பிரதான வீதியினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளமையினால் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி பணிகளுக்காகவே இவ்வாறு வீதிகள் மூடப்பட்ட உள்ளது.
வவுனியா சிங்கள பிரதேச செயலகம் அமைந்துள்ள பகுதியினை அண்மித்த பகுதியில் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காணப்படும் புகையிரத கடவை பாதையினை சீர்செய்யும் வேலைத்திட்டம் காரணமாக நாளை (01.10.2022) முற்பகல் 7.00 மணி தொடக்கம் நாளைமறுதினம் (02.10.2022) பிற்பகல் 10.30 மணி வரையிலான காலப்பகுதிக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.
எனவே மக்கள் அசோரிகரியங்களுக்கு உள்ளாகதாக வகையில் மாற்று வீதிகளான புகையிரதநிலைய வீதி, நகரசபை நூலக வீதி, அரச விடுதி வீதி போன்ற வீதிகளை பயன்படுத்துமாறு இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.