தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் மிஷ்கின்.
இவர் அடுத்ததாக ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அவர் இயக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நடிகர் வித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் .
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.