வித்தியா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து - Tamil VBC

வித்தியா கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்றையதினம் அனைத்துலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

இந்த நிகழ்வுகள் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த ஜனாதிபதி, வித்தியா வழக்கின் தீர்ப்பு குறித்தும் முதன்முதலாக கருத்து வெளியிட்டிருந்தார்.

‘பாடசாலைகளில் சிறுவர்களுக்கு உள்ள பாதுகாப்பு வீடுகளில் உள்ளதா என்பது கேள்விக்குரிய விடயமாகும். இந்த சிறுவர் தினத்தில் எமது பிள்ளைகளுக்காக ஆன்மீக ரீதியான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

மேலும், மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த நாட்டின் மிக முக்கியமான தீர்ப்பாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும்; அனைத்திற்கும் மேலாக மதிக்கப்படவேண்டிய தீர்ப்பாகும்.’ என அவர் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தார்.

வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் அனைவருக்கும் கடந்த மாதம் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  விளக்கத் தீர்ப்பாயத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டமை தெரிந்ததே.

இந்த தீர்ப்பு தொடர்பாக நாட்டின் பல்வெறுபட்ட பிரமுகர்களும் தமது கருத்துக்களினை முன்வைத்துவந்த நிலையில் முதன்முதலாக தீர்ப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *