பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.
பொலிவூட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை தமிழ் படத்தில் நடித்ததில்லை. தற்போது முதல் முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தமிழ், மற்றும் இந்தியில் படமாக்கவுள்ளனர்.
கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார். மார்ச் 2019 இல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.